இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் நான்காம் வருட மாணவிகளுக்கான பெற்றோர் கூட்டம் 04.01.2026 ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
கல்லூரியின் கௌரவ பணிப்பாளர் கலாநிதி அஷ் -ஷெய்க் ML.முபாரக் மதனி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் மாணவிகளின் பெற்றோர்களும் மாணவிகளும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மேற்படி கூட்டத்தில் கல்லூரியின் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நடைமுறைகள், ஒழுங்குகள் மற்றும் அடைவுகள் பற்றி மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் பணிப்பாளர் அவர்களினால் விவரிக்கப்பட்டது.





