மீன் தொட்டி திறந்துவைப்பு -மாணவர்களின் மனநல வளர்ச்சிக்கு புதிய முயற்சி

எமது கல்லூரியின் கல்விச் சூழலை மேலும் அழகுபடுத்துவதற்கும், மாணவர்களின் மனஅழுத்த மேலாண்மையை ஊக்குவிப்பதற்கும் அமைக்கப்பட்ட மீன் தொட்டி (Fish Tank) 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இது மாணவர்களிடையே இயற்கை மீதான ஆர்வத்தை வளர்க்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வண்ணமயமான மீன்களின் சுறுசுறுப்பான அசைவுகளும், நீர்ச் சூழலின் ஒழுங்கமைப்பும் பார்வையாளர்களுக்கு மன அமைதியையும் கண்ணின்பத்தையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் கல்விச் செயல்பாடுகளுக்கு இடையே மனஇளைப்பாறலை பெறும் […]
நூல் வெளியீட்டு விழா

எமது கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரான அஷ்ஷெய்க் எம்.எச். அஸ்பர் ஹஸன் (பலாஹி) B.A. அவர்களினால் எழுதப்பட்ட ” நோன்பு ஒரு பிரயோக வழிகாட்டல் ” எனும் நூலின் வெளியீட்டு வைபவம் இன்று 2026.02.16 ஆம் திகதி கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் கௌரவ பணிப்பாளர் அஷ்ஷெய்க் கலாநிதி எம் . எல். முபாரக் (மதனி), கல்லூரியின் கௌரவ செயலாளர் எம் .பஹ்ருதீன் ஆசிரியர், உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஆர்.நுவீஸ் (மக்கி), அனைத்து விரிவுரையாளர்கள், கல்வி […]
தாறுல் ஹுதாவில் இஸ்லாமிய வரையறைகளுடன் 78வது சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

“அழகு, கலாச்சாரம் மற்றும் நெகிழ்ச்சியின் நிலம்” என்ற தொனிப்பொருளில், எமது இலங்கை திருநாட்டின் 78வது சுதந்திர தினமானது கல்லூரியின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஆர்.நுவீஸ் ஸலபி, மக்கி Ph.D (r) அவர்களின் தலைமையில், இன்று 2026 பெப்ரவரி 04 ஆம் திகதி புதன்கிழமை எமது கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டது. கல்லூரியின் கேட்போர் கூடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில், நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளால் பல்வேறுபட்ட நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதோடு சிரேஷ்ட விரிவுரையாளரான அஷ்ஷெய்க் ஏ.சி.தஸ்தீக் […]
சிறப்பு விருந்தினர்கள் வருகை.

எமது கல்லூரிக்கு இன்று 2026.2.1 ஆம் திகதி அனுராதபுரம் நாச்சியாபுரத்தைச் சேர்ந்த அஷ்ஷெய்க் ஷாஹுல் ஹமீத் முஹம்மது பழீல் நளீமி அவர்களின் தலைமையில் அவ் ஊரை சேர்ந்த பள்ளிவாயல் தலைவர்கள் , ஆலிம்கள் மற்றும் நிறுவன முகாமையாளர்கள் என பல்வேறு பட்ட பிரமுகர்கள் 28 பேர் வருகை தந்தனர். இதன் போது எமது கல்லூரியின் வளாகம் , நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் போன்ற விடயங்களில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. jamiejerksme babesafreak porn […]
சிறப்பு விருந்தினர் சொற்பொழிவு

தாருல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியின் ஏற்பாட்டில், மாணவிகளின் அறிவாற்றல், ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் சமூக பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் சிறப்பு விருந்தினர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று 2026 ஜனவரி 10ஆம் திகதி இரவு 9.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பிரபல குழந்தை நல மருத்துவரும், அப்ரார் நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் ரயீஸ் முஸ்தஃபா (Consultant Pediatrician, Chairman – Abrar Foundation, Pediatric Intensivist – The Portland Hospital, […]
நிருவாக சபைத் தலைவர் Dr. ஏ.ஆர்.எம். ஹாரிஸ் (MBBS) அவர்களுக்கு பணிநயப்பு விழா-2025

தாருல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி நிர்வாக சபை தலைவர் டொர்டர். ஏ.ஆர்.எம். ஹாரிஸ் (MBBS) அவர்கள் தனது வைத்திய சேவையிலிருந்து ஓய்வு பெற்றதை முன்னிட்டு அவர்களுக்கான பணி நயப்பு நிகழ்வு 28.12.2025 ஆம் திகதி கல்லூரி மண்டபதில் நடைபெற்றது . நிர்வாகிகள் மற்றும் விரிவுரையாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி அவர்களின் தலைமையிலும் கல்லூரியின் கௌரவ செயலாலர் ஓய்வு பெற்ற ஆசிரியர் எம். […]
பிரியாவிடை நிகழ்வு -2025

கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி தமது சேவை காலத்தை கல்லூரி மாணவர்களுக்காக அர்ப்பணம் செய்த கல்லூரியின் விரிவுரையாளர்களான எமது ஆங்கில பாட ஆசிரியர் SINNA LEBBAI ANVER KHAN (B.A, M.A, Dip in ENG, B.A in HL) அவர்களுக்கும் ,அரபு பாட ஆசிரியர்களான MOULAVIYA ABDUL MAJIDH FATHIMA ZEENA (B.A) மற்றும் MOULAVIYA ABDUL RAUF FATHIMA SUJA ( HUDHAYIYYA, (B.A))அவர்களுக்கும் கல்லூரியின் நூலகரான ,ஆசிரியை MOULAVIYA MOHAMED KALEEL MUZNA (HUDHAYIYYA, […]
சர்வதேச அரபு மொழி தினம்-18/12/2025

சர்வதேச அரபு மொழி தினத்தை முன்னிட்டு 20/12/2025 சனிக்கிழமை அன்று தாருல்ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி மாணவிகளின் அரபு மொழியினை விருத்தி செய்வதற்கான போட்டி நிகழ்வுகள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் ளுஹர் தொழுஹையினை தொடர்ந்து 12.30pm-3.00pm வரை கல்லூரியின் விரிவுரையாளர்கள் குழாத்தினால் நடாத்தப்பட்டது . முதல் நிகழ்வாக அரபு மொழியின் முக்கியத்துவம் மற்றும் போட்டி நிகழ்வுகள் தொடர்பான அறிமுகத்தையும்,மாணவிகளுக்கான அறிவுரைகளையும் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் ML.முபாரக் (மதனி)அவர்கள் வழங்கினார்கள் . அதனை […]
விழிப்புணர்வுக் கருத்தரங்கு

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் 18.11.2025 ஆம் திகதியன்று எமது கல்லூரியில் நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் சம்பந்தமாக மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்சியொன்று நடத்தப்பட்டது . கல்லூரியின் கேட்போர் கூடத்தில் காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இக்கருத்தரங்கானது 12.00 மணியளவில் நிறைவடைந்தது . இதன்போது அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிலிருந்து (CONSUMER AFFAIRS AUTHORITY) அஷ் ஷெய்க் NMM. Rifkan (Haami) , ALA. Mendis, மற்றும் […]
வருடாந்த பரிசளிப்பு விழா – 2025

2024/2025 கல்வி ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா 04.10.2025 சனிக்கிழமை காலை 10.45 மணியளவில் தாருல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் விஷேட அதிதியாக உண்மை உதய சஞ்சிகையின் பிரதம ஆசிரியர், நாடறிந்த பேச்சாளர் அஷ்ஷெய்க் SHM.இஸ்மாயில் ஸலபி, MA அவர்களும், பிரதம அதிதியாக கல்லூரியின் கௌரவ பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் ML.முபாரக் மதனி அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் . பரிசளிப்பு நிகழ்வின் முதல் கட்டமாக […]
