ஸைதுல் ஃபவாயித் உத்தியோகபூர்வமாக திறந்துவைப்பு

எழுத்தாற்றலை வளர்க்கும் முகமாக எமது கல்லூரி மாணவிகளினால் பிரசுரிக்கப்படும் ஸையிதுல் பவாயித் எனும் சுவர் சஞ்சிகையினை இரண்டு மாதங்களுக்கொருமுறை வெளியிட்டு வருகின்றனர். வருடத்தில் ஒருமுறை ரமழான் மாதத்தில் உத்தியோகபூர்வமாகவும் விமரிசையாகவும் வெளியிடப்படும். அதன் தொடரில் இம்முறையும் (2025) ரமலான் மாதத்தை வரவேற்கும் முகமாக மாணவிகளின் ஏற்பாட்டில் கல்லூரியின் கௌரவ பணிப்பாளர் கலாநிதி Dr M.L. முபாரக் மதனி அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கல்லூரியின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஆர். நுவீஸ் மக்கி எம்.ஏ அவர்கள் […]
வேலை வாய்ப்பு
மாணவர் மன்றம்-06.02.2025

எமது கல்லூரியில் மாணவிகளின் திறமைகளை வளர்க்கும் முகமாக இரு வாரங்களுக்கு ஒரு முறை மாணவர் மன்றங்கள் வழமை தோறும் சிறப்புற இடம்பெற்று வருகின்றது, அல்ஹம்துலில்லாஹ். அந்த வகையில் இன்ஷாஅல்லாஹ் 6.2.2025 வியாழக்கிழமை இன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் றுகைய்யா குழுவினரால் இம்முறைக்கான மாணவர் மன்றம் நடாத்தப்படவுள்ளது. பின்வரும் மாணவிகள் மன்றத்தில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
அஷ்ஷெய்க் A. L. A. S. முஹம்மது முபாரக் (பாரி) அவர்களின் மறைவு

மருதமுனையின் மூத்த ஆலிம்களில் ஒருவரான அஷ்ஷெய்க் A. L. A. S. முஹம்மது முபாரக் (பாரி) அவர்களின் மறைவு மருதமுனைக்கு மட்டுமல்ல ஆலிம் சமூகத்திற்கே ஒரு பேரிழப்பாகும். 1944. 9. 25 ஆம் தேதி அன்று மருதமுனை மண்ணில் பிறந்த இவர்கள் தனது 9 ஆவது வயதில் மார்க்க கல்வியை கற்பதற்காக வெலிகாமத்தில் அமைந்துள்ள மதரஸத்துல் பாரி எனும் ஒரு பழமையான கல்லூரியில் சேர்க்கப்பட்டார்கள். 1958 ஆம் ஆண்டு தனது 14 வது வயதில் ஆலிமாக பட்டம் […]
வகுப்பறை நூலகம் – திறப்பு நிகழ்வு

கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி Dr. எம்.எல். முபாரக் (மதனி) அவர்களின் பணிப்புரையின் பேரில் மாணவிகளின் வாசிப்புத் திறனை வளர்க்கவும், வாசிப்பின் மீதுள்ள அவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் என ஒவ்வொரு வகுப்பறைக்குமான தனித்தனி வகுப்பறை நூலகங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் எமது கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த வகையில் 2025 ஜனவரி 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று வகுப்பறை நூலகங்கள் அனைத்தும் உத்தியோக பூர்கமாக திறந்து வைக்கப்பட்டன அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்வானது எமது கல்லூரியின் கௌரவ பணிப்பாளர், காலாநிதி Dr. எம்.எல். முபாரக் […]
பிரியாவிடை நிகழ்வு

தாருல் ஹுதா அறபு மற்றும் இஸ்லாமியக் கற்கைகள் மகளிர் கல்லூரியில் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றிய Ash-sheikh AL. Mohamed Faizal (Sahwi, Madhani, B.A(Hons), M.A) அவர்கள் தனது மேற்படிப்பு மற்றும் தனிப்பட்ட தேவை காரணமாக கல்லூரியின் விரிவுரையாளர் சேவையிலிருந்து விலகிக் கொண்டதை முன்னிட்டு, அவர்களது சேவைகளைப் பாராட்டி கௌரவிக்குமுகமாக 16.01.2025 வியாழக்கிழமை கல்லூரியின் நிருவாக சபை, விரிவுரையாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவிகளினால் பிரியாவிடை நிகழ்வு கல்லூரியின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ். கல்லூரியின் […]
சர்வதேச அறபு மொழிப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு

தாறுல்ஹுதா அறபு மற்றும் இலாமிய கற்கைகளுக்கான மகளிர் கல்லூரியில் சர்வதேச அரபு மொழி தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற போட்டி நிகழ்வுகளில் (18.12.2024) கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு 12.01.2025 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் காலை 11.00 மணி தொடக்கம் மதியம் 1.50 மணி வரை வெகு விமர்சையாக இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ் . கல்லூரியின் நிர்வாக சபைத் தலைவர் கௌரவ Dr .ARM. ஹாரிஸ் […]
Special Motivational Program -2024 December

2024 டிசம்பர் 19ஆம் திகதி வியாழக்கிழமை அன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் மாணவிகளுக்கான Special Motivational Program ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 9.30 தொடக்கம் 10.30 வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர் , உதவிப்பணிப்பாளர் மற்றும் அனைத்து விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர். அத்தினத்தில் கல்லூரிக்கு விஷேட வருகை தந்திருந்த Dr. Alavi Sheriffdeen நளீமி (School for Pioneers DASSP) அவர்களும் சிறப்பு வளவாளராக கலந்து சிறப்பித்திருந்தார்கள். இந்நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் […]
சர்வதேச அறபுமொழி தின சிறப்புநிகழ்ச்சி – 2024

டிசம்பர் 18 புதன்கிழமை சர்வதேச அறபுமொழி தினத்தை முன்னிட்டு எமது கல்லூரி சிறப்பு நிகழ்வொன்றை நடாத்தியது. இந்நிகழ்வானது மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களை ஒருங்கிணைத்து அறபு மொழியின் சிறப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில் அமையப்பெற்றது, அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக எமது கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி அவர்களால் Dr. PMM. IRFAN நளீமி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் வளவாளராகவும் அழைக்கப்பட்டிருந்தார். மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது தாய்லாந்து பிரின்ஸ் ஆப் சொக்லாந்து […]
சர்வதேச அரபு மொழிப் போட்டி – டிசம்பர் 2024

அரபு மொழியின் ஆழமான செழுமையையும் அதன் கலாச்சார பாரம்பரியத்தையும் நினைவுபடுத்தும் ஒரு மதிப்பு மிக்க நிகழ்வான சர்வதேச அரபு மொழிப்போட்டி தாருல் ஹ_தா அறபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில், கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி அவர்களின் வழிகாட்டலில் எதிர் வரும் (16-18.12.2024) ம் திகதிகளில் நடாத்தப்பட இருக்கிறது. கல்லூரியால் நடாத்தப்படும் இந்தப் போட்டியானது உலகின் மிகவும் செல்வாக்குமிக்க மொழிகளில் ஒன்றிற்கான ஆழ்ந்த பாராட்டுக்களை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . இந்த நிகழ்வில் அரபு […]
